Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 17 பேர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு: இந்தியாவில் மீண்டும் ஒரு அலையா?

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (08:11 IST)
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் ஒரு அலை தோன்றி விடுமோ என்ற அச்சம் அனைவர் மனதிலும் ஏற்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையும், இந்த ஆண்டு 2வது அலையும் வீசிய நிலையில் தற்போது தான் கொரோனாகட்டுப்பாட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி விட்டது என்பதும் நேற்று முன்தினம் வரை மூன்று பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. முதல் அலை, இரண்டாவது அலைபோல் ஒமிக்ரான் அலையும் இந்தியாவில் தோன்றுமோ என்ற அச்சத்தை அரசு தான் போக வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments