Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத்தில் சாமி தரிசனம் செய்த சிந்து

ஹைதராபாத்தில் சாமி தரிசனம் செய்த சிந்து

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2016 (10:44 IST)
நடந்து வரும் ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு, வெள்ளிப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.


 

 
ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்த அவருக்கு பிரதமர் மோடி முதல் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு வீடு, கார், அரசு வேலை மற்றும் கோடிக்கணக்கில் பணமும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், ஹாதராபாத் திரும்பிய அவருக்கு தாரை தப்பட்டையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் ஒரு மைதானத்தில் அவருக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. அதில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு சிந்துவை பாராட்டினார்.
 
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள சிம்மவாஹினி  கோவிலில் அவர் வழிபாடு செய்தார். புடவை அணிந்து, தலையில் தட்டை தூக்கிக் கொண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தார் சிந்து. தான் பெற்ற வெள்ளிப்பதக்கத்தை அவர் சாமி முன்பு வைத்து வழிபட்டார். அவருக்காக, கோவிலில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது.

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments