Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைச்சாலை கைதிகள், காவலர்களுக்கு கொரோனா! – ஒடிசாவில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (08:20 IST)
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் ஒடிசா சிறைச்சாலை ஒன்றில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிறைச்சாலை கைதிகளுக்கும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் பல மாநில அரசுகளும் சிறை கைதிகளை பரோலில் அனுப்புவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவுக்கு பயந்து சிறையை விட்டு செல்ல கைதிகள் மறுக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் ஒடிசாவில் உள்ள கிளை சிறைச்சாலையில் பலருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. சிறையில் உள்ள 113 கைதிகளுக்கு கொரோனா சோதனை நடத்தியதில் 70 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 5 சிறை காவலர்களுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அந்த 75 பேரும் சிறைக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

அடுத்த கட்டுரையில்
Show comments