Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடங்கி கிடப்பதை விட முடிவெடுப்பது சிறந்தது! – 1700 கி.மீ சைக்கிளில் சென்ற இளைஞர்!

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (08:22 IST)
கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக 1700 கிலோ மீட்டர்கள் சைக்கிளில் தொழிலாளி ஒருவர் பயணம் செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தொழிலாளிகள் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல தொழிலாளர்கள் கால்நடையாக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதும், அப்போது சில உயிரிழப்புகள் ஏற்படுவதும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஒடிஷாவை சேர்ந்த மகேஷ் ஜீனா என்ற இளைஞர் தனது சொந்த ஊருக்கு செல்ல நினைத்துள்ளார். ஊரடங்கால் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும், தனது கையிருப்பில் பணம் குறைவாக இருந்ததாலும் ஊருக்கு செல்ல நினைத்த அவர் வித்தியாசமான முடிவை எடுத்துள்ளார்.

தொழிற்சாலைக்கு சென்று வர வைத்திருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார். போகும் வழியில் பல இடங்களில் தங்கி உண்டு, பலரிடம் வழிக்கேட்டு அவரது பயணம் தொடர்ந்துள்ளது. ஒரு வார காலத்தில் சுமார் 1700 கி.மீ பயணம் செய்து மகாராஷ்டிரா, ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களை கடந்து ஒடிஷாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்குள்ள பள்ளியில் aவரை தனிமைப்படுத்தியுள்ளனர்.

இந்த பயணம் குறித்து பேசியுள்ள அவர் “கொரோனாவால் முடங்கி கிடக்க முடியாது என்பதால் ஏதாவது ஒரு முடிவு எடுப்பது சிறந்தது என தோன்றியது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments