நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 9 கட்டங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், ஓடிசாவில் வாக்குப்பதிவு நடைபெற்ற ஒன்பது வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி ஒடிசாவின் கட்டக், கியோன்ஜ்கார் மற்றும் கேந்திரபதா ஆகிய மாவட்டங்களில் 9 வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பவங்கள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அந்த வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த 9 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடனும், கண்காணிப்புடனும் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.