Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்கள் ரகளை :விசாரணைக்கு உத்தரவிட்டார் ஒடிசா முதல் அமைச்சர் நவீன் பட்நாயக்

Webdunia
புதன், 7 அக்டோபர் 2015 (09:11 IST)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது ஒடிசா மாநிலத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருப்பதாக அம்மாநில முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் வேதனை தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான  2-வது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத இந்திய அணி 92 ரன்னில் சுருண்டது.
 
இதனால் ஆவேசமடைந்த ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக தண்ணீர் பாட்டில்களை மைதானத்திற்குள் வீசினர். இதனால் போட்டி இரண்டு மணி போட்டி தடைபட்டது.
 
இந்நிலையில் ரசிகர்களின் இந்த அநாகரிக செயல் மாநிலத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருப்பதாக அம்மாநில முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

Show comments