Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (20:31 IST)
அக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என்றும் அன்று ஒரே நாளில் சுமார் 25 செமீ மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் அரசுப் பணியாளர்கள் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என்றும் அனைவரும் தவறாமல் பணிக்கு வரவேண்டும் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

மேலும்  புதுச்சேரியில் நாளை 6ஆம் தேதி சனிக்கிழமை, பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக புதுவை அரசு அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு.. முதல்வர் அறிவிப்பு..!

தமிழக பட்ஜெட் எப்போது? சபாநாயகர் அப்பாவு தகவல்..!

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments