Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான் - ஜெ.தீபா குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (21:43 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையம் என்ற இல்லத்தில் வசித்துவந்தார். அவர் மறைந்த பிறகு அவரது சாதனைகளை நினைவுகூரும் வகையில் அந்த வீட்டை அரசுடமையாக்கி, நினைவில்லமாக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இதற்கான அரசிதழ் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசிதழ் அறிவிப்பில் ஜெயலலிதாவின் இல்லத்தைக் கையகப்படுத்தியபோது என்னென்ன பொருட்கள் இருந்தன என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் அரசின் இம்முடிவுக்கு  ஜெ.தீபா கடும் எதிர்ப்புகள்  தெரிவித்தார்.

இந்நிலையில் ஜெ,தீபா இதுகுறித்து இன்று கூறியுள்ளதாவது :

ஜெயலலிதாவிம்ன் சொத்துகளை அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை; நான் நடத்துவது உரிமைக்கான போராட்டம் என்றும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்தான் என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments