Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்னியஸ்திரி கொலை வழக்கில் குற்றவாளி கைது

கன்னியஸ்திரி கொலை வழக்கில் குற்றவாளி கைது
, வெள்ளி, 25 செப்டம்பர் 2015 (11:09 IST)
கேரள மாநிலம் கோட்டையத்தில் கன்னியஸ்திரி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி உத்தரகாண்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.


 


கோட்டையத்தை அடுத்த பாலா என்ற இடத்தில் கன்னியஸ்திரிகளின் இல்லம் உள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைக்கு சொந்தமான இந்த இல்லத்தில் கன்னியஸ்திரி அமலா என்பவர் தங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி அமலா தனது அறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக போலீஷார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் காசர்கோட்டையைச் சேர்ந்த சதீஷ் பாபு என்பவர் அமலாவை கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்தது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் உத்தரகண்டின் ஹரித்துவாரில் உள்ள ஆசிரமம் ஒன்றின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து உத்தரகாண்ட் போலீசாருக்கு கேரள போலீசார் தகவல் அளித்தனர்.

இந்நிலையில் கேரள போலீசாரின் தகவலைத் தொடர்ந்து அங்கு  விரைந்த உத்தரகாண்ட் போலீசார் அமலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சதீஷ் பாபுவை கைது செய்தனர். சதீஷ் பாபுவை கேரளா கொண்டு வருவதற்காக கேரள போலீஷ் குழு உத்தரகண்ட் விரைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil