Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: டி. ராஜா கோரிக்கை

Webdunia
புதன், 28 ஜனவரி 2015 (13:37 IST)
இந்தியா, அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தில் அவசரம் காட்டுவது குறித்து, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்யில் டி. ராஜா வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா கூறியதாவது:-
 
அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அதற்கு இழப்பீடு வழங்குவதில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில், அந்நாட்டின் கோரிக்கைகளை இந்தியா ஏற்றுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது.
 
பல்வேறு இடங்களில், அணுஉலைகள் மிகவும் சிக்கலான நிலையில் இயங்கி வருகின்றன. அப்படி இருக்கும்போது, அணு உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்துக்கு அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கும் என நான் நம்புகிறேன். இவ்வாறு ராஜா கூறியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Show comments