Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: டி. ராஜா கோரிக்கை

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: டி. ராஜா கோரிக்கை
, புதன், 28 ஜனவரி 2015 (13:37 IST)
இந்தியா, அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தில் அவசரம் காட்டுவது குறித்து, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்யில் டி. ராஜா வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா கூறியதாவது:-
 
அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அதற்கு இழப்பீடு வழங்குவதில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில், அந்நாட்டின் கோரிக்கைகளை இந்தியா ஏற்றுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது.
 
பல்வேறு இடங்களில், அணுஉலைகள் மிகவும் சிக்கலான நிலையில் இயங்கி வருகின்றன. அப்படி இருக்கும்போது, அணு உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்துக்கு அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கும் என நான் நம்புகிறேன். இவ்வாறு ராஜா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil