Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆலோசிக்கவில்லை: வெங்கையா நாயுடு

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆலோசிக்கவில்லை: வெங்கையா நாயுடு
, சனி, 18 அக்டோபர் 2014 (12:56 IST)
இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து மத்திய அரசு இதுவரை ஆலோசிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.
 
சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் பேசும்போது, ''ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கிய போதிலும், அந்த அமைப்பின் மீதான தடையை இந்தியாவில் நீக்குவது குறித்து மத்திய அரசு இதுவரை ஆலோசிக்கவில்லை.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil