Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்து அல்லாதவர்கள் நுழையக்கூடாது.. கிராமத்தில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு..!

Siva
ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (15:33 IST)
இந்து அல்லாதவர்கள் நுழைய கூடாது என்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் பேனர் வைக்கப்பட்டதை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் என்ற மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று பேனர் வைக்கப்பட்டுள்ளது/ இந்த பேனர் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த பேனரில் இந்துக்கள் அல்லாதவர்கள், ரோகிங்கியா முஸ்லிம்கள் மற்றும் வியாபாரிகள் கிராமத்திற்கு நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கிராமத்தில் எங்கேயாவது அவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்த புகாரை அடுத்து போலீசார் அந்த பேனர்களை அகற்றினர். அப்போது கிராமத்தில் உள்ளவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த பேனர் வைத்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் இருக்கும் பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் வழக்கு: பெங்களூரு இளம்பெண் புகார்..!

அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதம் குறைப்பு: உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை..!

என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கக் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் விடிய விடிய போராட்டம்!

3வது நாளாக சரிந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

திமுக பிரமுகர் மீது கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து - பெட்ரோல் கேனுடன் குடும்பத்தினர் டிஎஸ்பி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments