Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது ஒன் ப்ளஸ் இல்லையா.. சாரி இந்த போன் வேணாம்! – திருடிய போனை திருப்பி கொடுத்த திருடன்!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (17:14 IST)
உத்தர பிரதேசத்தில் ரயிலில் செல்போன் திருடிய நபர் தனக்கு பிடித்த செல்போன் மாடல் அது இல்லை என்பதால் உரிமையாளரிடமே திருப்பி கொடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நாள் தோறும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும் சில திருட்டு சம்பவங்கள் விநோதமாக அமைந்து விடுவதும் உண்டு. உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் சென்றுக் கொண்டிருந்தபோது அவரிடம் இருந்த செல்போனை திருடன் ஒருவன் திருடி சென்றுள்ளான்.

பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்த திருடன் தான் அதை ஒன் ப்ளஸ் போன் என நினைத்து திருடியதாகவும், ஆனால் அது சாம்சங் என்பதால் அது தனக்கு தேவையில்லை என்று மீண்டும் பயணியிடமே அந்த போனை கொடுத்து சென்றுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments