Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது ஒன் ப்ளஸ் இல்லையா.. சாரி இந்த போன் வேணாம்! – திருடிய போனை திருப்பி கொடுத்த திருடன்!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (17:14 IST)
உத்தர பிரதேசத்தில் ரயிலில் செல்போன் திருடிய நபர் தனக்கு பிடித்த செல்போன் மாடல் அது இல்லை என்பதால் உரிமையாளரிடமே திருப்பி கொடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நாள் தோறும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும் சில திருட்டு சம்பவங்கள் விநோதமாக அமைந்து விடுவதும் உண்டு. உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் சென்றுக் கொண்டிருந்தபோது அவரிடம் இருந்த செல்போனை திருடன் ஒருவன் திருடி சென்றுள்ளான்.

பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்த திருடன் தான் அதை ஒன் ப்ளஸ் போன் என நினைத்து திருடியதாகவும், ஆனால் அது சாம்சங் என்பதால் அது தனக்கு தேவையில்லை என்று மீண்டும் பயணியிடமே அந்த போனை கொடுத்து சென்றுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments