Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது: முன்பதிவு செய்யும் அனைவருக்கும் ரயில் வசதி..!

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (14:21 IST)
வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் அனைவரும் பயணம் செய்யும் வகையில் சிறப்பு ரயில் விடப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 
 
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுக்களை விலை உறுதி செய்யும் வகையில் அதிகமான ரயில்கள் இயக்கப்படும் என்றும் அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் 3000 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்  இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  
 
வரும் 2027- 28 ஆம் ஆண்டுகளில் வெயிட்டிங் லிஸ்ட் என்பதே இருக்காது என்றும் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் பயணம் செய்வதற்கான டிக்கெட் உறுதி செய்யப்படும் நிலை ஏற்படும் என்றும் ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்  
 
தற்போது ஆண்டுக்கு 800 கோடி பேர் ஆண்டுக்கு ரயிலில் பயணம் செய்து வருவதாகவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது ஆயிரம் கோடியாக மாறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். 
 
அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் 3000 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் விடப்படும் என்றும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments