Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சையானாலும் விற்பனையில் குறைவில்லை.. 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை..!

Siva
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (17:59 IST)
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் நான்கு நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக லட்டுவில் விலங்குகள் கொழுப்பு கலந்திருப்பதாக கூறப்பட்டாலும் விற்பனையில் சரிவில்லை.

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு லட்டு கொண்டு செல்வது ஒரு பழக்கமாகி விட்டது. எனினும், சமீபத்தில் லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாக உலுக்கிய சர்ச்சை, ஆந்திரா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த குற்றச்சாட்டுகள் விற்பனையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:"விலங்கு கொழுப்பு கலப்பட குற்றச்சாட்டு திட்டமிட்ட ஒரு உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது.அதற்குப் பிறகும் லட்டு விற்பனை முந்தைய அளவையே தாண்டியிருக்கிறது.

 சமீபத்திய நான்கு நாட்களில் மட்டும் 14 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளது. குறிப்பாக செப்டம்பர் 19 ஆம் தேதி 3.59 லட்சம் லட்டுகள், செப்டம்பர் 20 ஆம் தேதி 3.67 லட்சம், செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய இரு நாட்களில் தலா 3.60 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன."

தினசரி சாதாரணமாக 3.50 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது அதன் அளவை மீறி, 3 லட்சம் லட்டுகள் கூடுதலாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

லட்டு தயாரிப்பில் கடலைப்பருப்பு, பசு நெய், சர்க்கரை, முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்ற ஆரோக்கியமான பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. தினசரி லட்டு தயாரிப்பில் 15,000 கிலோ அளவிலான பசு நெய் பயன்படுத்தப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

சங்பரிவாரின் பேச்சை கேட்டு நடக்கும் சீமான்? கட்சியிலிருந்து விலகிய ஜெகதீச பாண்டியன் பரபரப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments