Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 15 முதல் முன்பதிவு தொடக்க்கமா? ஏர் இந்தியா விளக்கம்

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (08:04 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து ஒரு சில தனியார் விமான நிறுவனங்களும் இந்திய ரயில்வேயும் ஏப்ரல் 15 முதல் முன்பதிவை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
ஏற்கனவே இந்தியன் ரயில்வே ஏப்ரல் 15 முதல் தொலைதூர பயணங்களுக்கான முன்பதிவை தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 15 முதல் முன்பதிவை தொடங்க போவதில்லை என சற்றுமுன் அறிவித்துள்ளது
 
ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவையை தொடங்குவது குறித்து ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பின்னர் இந்திய அரசு கூறும் அறிவுரையை பொறுத்தே முன்பதிவை தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் ஏப்ரல் 15 முதல் ஒருசில தனியார் விமானங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கியிருப்பவர்கள் தனியார் விமான சேவையை பயன்படுத்த தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments