Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நடிகை நக்மா பகீர் தகவல்

நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நடிகை நக்மா பகீர் தகவல்
, புதன், 21 அக்டோபர் 2015 (23:45 IST)
நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நடிகை நக்மா கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
புதுச்சேரியில் மகளிர் அணி நிர்வாகிகளை பிரபல நடிகையும், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் நக்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
புதுச்சேரியில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், புதுச்சேரியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. புதுச்சேரி மட்டும் அல்ல நாட்டில் உள்ள பெரும்பாலன பகுதிகளில் குறிப்பாக, நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.
 
மாட்டிறைச்சி விவகாரத்தை மையப்படுத்தி நாட்டில் மக்களை மதரீதியிலான பிளவை உருவாக்க பாஜக முயற்சி செய்கிறது.  பாஜகவின் சதிக்கு பொதுமக்கள் யாரும் பலியாகக்கூடாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத ரீதியான வன்முறைகள் கட்டுப்படுத்தப்படும். காங்கிரஸ் ஆட்சி மட்டுமே அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான ஆட்சியாகும் என்றார். 
 

Share this Story:

Follow Webdunia tamil