Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாட்டில் மோடி அலை இல்லை; ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன - மாயாவதி

நாட்டில் மோடி அலை இல்லை; ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன - மாயாவதி
, புதன், 30 ஏப்ரல் 2014 (13:22 IST)
நாட்டில் மோடி அலை இல்லை. அப்படி ஒன்று இருப்பதாக ஊடகங்கள்தான் பெரிது படுத்துகின்றன என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உ.பி. முன்னாள் முதல்வருமான மாயாவதி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் இன்று காலை வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாயாவதி கூறியதாவது:-
 
"நாட்டில் மோடி அலை இல்லை. அப்படி ஒன்று இருப்பதாக ஊடகங்கள்தான் பெரிது படுத்துகின்றன. நான் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆனால், எந்த பகுதியிலும் மோடிக்கு அதீத ஆதரவு இருப்பதாக தெரியவில்லை.
 
தலித் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாபா ராம்தேவ் பேசியதற்கு பாஜக எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காதது ஏன்?. தலித் வாக்குகளைப் பெற பாஜக கடும் முயற்சி செய்து வரும் தலித் பெண்ணை இழிவு படுத்தி ராம்தேவ் பேசியதை கண்டிக்காதது ஏன்? ராம்தேவ் ஆதரவை கோரியிருப்பதால் பாஜக அமைதியாக இருக்கிறது. இவ்விவகாரத்தில், காங்கிரஸும் மவுனம் காக்கிறது". இவ்வாறு மாயாவதி பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil