Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களை தவிர அனைவரும் பாஸ்: அரசு அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (17:09 IST)
கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களை தவிர அனைவரும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி என மகாராஷ்ட்ரா அரசு அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் நடைபெறாத நிலையில் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர மற்ற அனைத்து மாணவர்களும் தேர்வு இன்று பாஸ் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது
 
கல்லூரிகளில் படிக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி அடுத்த ஆண்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும் என்று அறிவித்துள்ளது 
 
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் அம்மாநிலம் இயல்பு நிலை திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்த இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதால் முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவர்களை மட்டும் தேர்வு இன்றி பாஸ் என்ற முடிவை மகாராஷ்டிரா அரசு எடுத்துள்ளது 
 
இந்த தகவலை மகாராஷ்டிர மாநில உயர் மற்றும் தொழில் கல்வி அமைச்சர் உதய்சம்பத் அவர்கள் சற்று முன் அறிவித்துள்ளார். இறுதியாண்டு மாணவர்களுக்கு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments