Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் டி.வி.க்கும் எங்களும் தொடர்பு இல்லை: ஆ.ராசா, கனிமொழி

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2014 (15:08 IST)
ரூ.200 கோடி பணப் பரிவர்த்தனை நடந்தபோது, கலைஞர் டி.வி.க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
 
2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டின்போது, கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 
இந்த வழக்கின் விசாரணை இன்று (26 ஆம் தேதி) நடந்தது. அப்போது, கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணப் பரிவர்த்தனையில் கூறப்படும் குற்றச்சாற்றுக்கு ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர்.
 
ஆ.ராசா கூறுகையில், ''கலைஞர் தொலைக்காட்சிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை'' எனக் கூறினார்.
 
''பணப் பரிவர்த்தனை நடந்ததாக கூறப்படும்போது நான் கலைஞர் டி.வி.யில் எந்த பதவியிலும் இல்லை. கலைஞர் டி.வி. பங்குகளைளை சினியுக் பிலிம்சுக்கு விற்பதற்கான கூட்டத்திலும் நான் பங்கேற்கவில்லை. கலைஞர் டி.வி. இயக்குநரக கூட்டத்தில் 3 முறை மட்டுமே பங்கேற்றுள்ளேன்'' என கனிமொழி கூறினார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments