Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஸ்லிம்களுக்கு எவ்வித சலுகையும் அளிக்கக்கூடாது - சுப்பிரமணிய சாமி

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2015 (19:03 IST)
முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் எவ்வித சலுகையும் அளிக்கக்கூடாது என்று சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
 
இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முஸ்லிம்களுக்கு கல்வியில் வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இட ஒதுக்கீட்டை மகாராஷ்டிரா அரசு ரத்து செய்திருக்கிறது. மகாராஷ்டிரா அரசின் இந்த முடிவை நான் வெகுவாக வரவேற்கிறேன்.
 
இந்திய அரசியல் சாசனத்தை தெளிவாக ஆராய்ந்தால், மத அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு அளிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்பது தெரியும். மேலும், முஸ்லிம்கள் இந்தியாவில் 800 ஆண்டுகள் ஆட்சி செலுத்தியுள்ளனர்.
 
8 நூற்றாண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் தங்களை சமூகத்தில் சிறுபான்மையினராகவோ அல்லது சமூகத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாகவோ கோருவதில் நியாயமில்லை. எனவே முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் எவ்வித சலுகையும் அளிக்கக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

இலங்கை சீதை கோயிலில் மகா கும்பாபிஷேகம்: இந்தியாவிலிருந்து சென்ற சீர்வரிசைகள்..!

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்று எத்தனை மாவட்டங்களில் கனமழை?

Show comments