Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படாது: பாஜக மேலிடம்...

Webdunia
புதன், 7 மார்ச் 2018 (20:55 IST)
பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா தமிழகத்தில் பெரியாரின் சிலை உடைக்கப்படும் என தெரிவித்தது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 
 
அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி சினிமா துறையை சேர்ந்த சிலறும் இதனை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தனர். இதை தவிர்த்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம், சாலை மறியல், உருவ பொம்மை எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. 
 
மேலும், பெரியார், அம்பேத்கர், பாஜக தலைவர் ஆகியோரின் சிலை உடைப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பிரதமர் மோடி அதிருப்தியை தெரிவித்தார். 
 
பல விமர்சனங்கலை தொடர்ந்து, எச்.ராஜா இந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் வன்முறையை தூண்டும் விதமாக பேசும்  இவர் மீது பாஜக மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனங்கள் வலுத்தது. 
 
இந்நிலையில், எச்.ராஜா மீது கட்சி நடவடிக்கை எடுக்குமா? என அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமித்ஷா, எச்.ராஜா மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments