Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டில் எங்கும் மோடி அலை இல்லை என நக்மா பேச்சு

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2014 (11:44 IST)
இந்தோரில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த காங்கிரஸ் கட்சியின் மீரட் தொகுதி வேட்பாளர் நக்மா, நாட்டில் எங்கும் மோடி அலை இல்லை எனத் தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் நடிகை நக்மா போட்டியிடுகிறார். இவர் இந்தோர்  தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சத்யநாராயன் படேலை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். 
 
அப்போது பேசிய அவர், பாஜக நாடெங்கும் மோடி அலை வீசுவதாக கூறிவருகிறது. நான் சொல்கிறேன் நாட்டில் எங்கும் மோடி அலை இல்லை.
 
அவ்வாறு மோடிக்கு ஆதரவாக மோடி அலை இருந்திருந்தால், மோடி ஏன் பாதுகாப்பான தொகுதியில் இருந்து போட்டியிட வேண்டுமென கேள்வி எழுப்பிய நக்மா,  பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம் ஊழலிலும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலிலும் முதல் இடத்தை பிடித்துள்ளதாக குற்றம் சாட்டினார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் கொடுத்து ஆடையின்றி ஆண்களை புகைப்படம் எடுத்த பெண்.. இளைஞர்கள் புகார்..!

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் கைது.. ஜாமின் நிபந்தனையை மீறினாரா?

இந்தியன் வங்கி தேர்வு எழுத வெளி மாநிலங்களில் தேர்வு மையம்: சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: துபாய் செல்லும் தனிப்படை போலீஸ்.. என்ன காரணம்?

இன்று தான் பள்ளி திறப்பு.. அதற்குள் 13ஆம் தேதி வரை விடுமுறை அளித்த சென்னை பள்ளி..!

Show comments