Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமாருக்கு வாக்களியுங்கள்: அரவிந்த் கெஜ்ரிவால்

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமாருக்கு வாக்களியுங்கள்: அரவிந்த் கெஜ்ரிவால்
, செவ்வாய், 27 அக்டோபர் 2015 (13:10 IST)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ் குமாருக்கு வாக்களிக்குமாறு பீகார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.


 
 
பீகார் சட்டப்பேரவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு 50 தொகுதிகளுக்கு நாளை (அக்டோபர் 28) நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில், கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: -
 
சகோதர சகோதரிகளே பீகாருக்கு நிதிஷ் குமார் முதலமைச்சராக வரவேண்டும்.

அவருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
 
நிதிஷ் குமார் வேகமாக செயல்படக்கூடியவர். உங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவார்" இவ்வாறு கெஜ்ரிவால் அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil