Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”சக்கரத்துக்கு கீழ் எலுமிச்சம்பழம் வைப்பது நமது கலாச்சாரம்..” நிதியமைச்சர் பதில்

Arun Prasath
சனி, 12 அக்டோபர் 2019 (08:33 IST)
விமான சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சை வைப்பது இந்திய கலாச்சாரம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் ரஃபேல் விமானத்தை, பாதுகாப்புத் துறை அமைச்சர், பெற்றுக்கொண்டதை அடுத்து அந்த விமானத்தில் “ஓம்” என்று எழுதியும், சக்கரத்தின் கீழ் எலுமிச்சம்பழம் வைத்தும் பூஜை செய்தனர்.

இது குறித்து பலர் கேலியும் விமர்சனமும் செய்து வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பதில் அளித்துள்ளார்.
அதில், ”சக்கரத்துக்கு கீழ் எலுமிச்சை வைப்பதில் எந்த தவறும் இல்லை, அது உங்களுக்கு மூட நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால், அது இந்திய கலாச்சாரத்தை சேர்ந்தது” என கூறியுள்ளார்.


”இதற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சராக இருந்த, அவருடைய மனைவியும் கடற்படை கப்பலை தொடங்கி வைத்தபோது அவர்களது மத நம்பிக்கைப்படி செயல்பட்டுள்ளனர்.இப்போது கேலி செய்பவர்கள், அப்போது எங்கே போனார்கள்?” எனவும் கேள்வி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

துணை முதலமைச்சர் பதவி! ஆசைக்காட்டினால் சென்று விடுவேனா? - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments