Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5ஜி டெக்னாலஜி வேணுமா.. நாங்க தறோம்..! – உலக நாடுகளுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு!

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (09:22 IST)
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

இந்தியாவில் 5ஜி சேவைக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் 5ஜி சேவையை தொடங்க முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை உரிமத்தை ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, அதானி நெட்வொர்க் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன.

ALSO READ: உயிரே போனாலும் பாஜகவோடு கூட்டணி இல்ல..!? – நிதிஷ்குமார் உறுதி!

இந்த தீபாவளி முதல் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 5ஜி சேவைக்கான தொழில்நுட்பங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 5ஜி சேவையை விரிவுப்படுத்த தொலைதொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது குறித்து பேசியுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வந்துவிடும். முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள 5ஜியை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் தயாராக உள்ளோம். இந்தியாவின் சாதனையை நினைத்து பெருமைப்படுகிறோம்” என்று கூறியுள்ளார்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

அடுத்த கட்டுரையில்
Show comments