Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புற ஏழைகளுக்கு ரூ.16000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

Webdunia
வியாழன், 14 மே 2020 (17:14 IST)
நேற்று முன் தினம்  ரூ. 20 லட்சம் கோடி அளவிலான திட்டங்களை பிரமதர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றும்போது தெரிவித்தார். இதையடுத்து, நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா  சீதா ராமன், முக்கியமான திட்டங்களை அறிவித்தார். இதற்குப் பல பாராட்டுகளும் விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில் இன்று இரண்டாவது முறையாக சில முக்கிய  திட்டங்களை அவர் அறிவித்து வருகிறார்.

அதில், நகர்ப்புற ஏழைகளுக்கு ரூ.16000 கோடி ஒதுக்கீடு,  ஊரக கிராமப் புற வங்கிகளுக்கு நபார்டு வங்கி மூலம் ரூ.29,000 கோடி கடனுதவி அளிக்கப்படும்.
நகர்ப்புற ஏழைகள் புலம்பெயர் ஊழியர்களுக்காக ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு அமைப்புசாரா ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம்.

நூறு நாட்கள் வேலை திட்டத்தின் கீழ் 14.62 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சொந்த ஊர் திரும்பும் புலம்பெயரும் ஊழியர்களுக்கு 110 நாள் திட்டத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

12 ஆயிரம்  சுய உதவிக்குழுக்கள் மூலம் இதுவரை 3 கோடி முகக் கவசங்களும், 1.2.லட்சம் லிட்டர் சானிடைசர்  தயாரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் கடந்த 2 மாதங்களில் சுமார் 7,200 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments