”என் மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது”.. நிர்பயா தாயார் நெகிழ்ச்சி

Arun Prasath
செவ்வாய், 7 ஜனவரி 2020 (18:09 IST)
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரையும் வருகிற ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிடவேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் “எனது மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது” என நிர்பயாவின் தாயார் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 4 பேருக்கும் உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என நிர்பயாவின் பெற்றோர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், வருகிற ஜனவரி 22 ஆம் தேதி காலை 7 மணிக்குள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த நிர்பயாவின் தாயார் “ நீதிமன்ற உத்தரவு மூலம் எனது மகளுக்கு நீதி கிடைத்துள்ளது. குற்றவாளிகளை தூக்கிலிடுவதன் மூலம் பெண்களுக்கு வலிமை கிடைக்கும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்