Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் திராவகம் வீச்சு : 9 பேர் காயம்

விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் திராவகம் வீச்சு : 9 பேர் காயம்
, செவ்வாய், 6 அக்டோபர் 2015 (19:23 IST)
விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்ச்சியின்போது அடையாளம் தெரியாத சிலர் திராவகத்தை வீசியதில் 9 வாலிபர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவரம் ஒரிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பெகுனியாபடா என்ற இடத்தில் கடந்த ஞாயிற்று கிழமை விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.  அப்போது, அடையாளம் தெரியாத சிலர் திராவகத்தை அங்கிருந்தவர்கள் மீது வீசியுள்ளனர்.  இதில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
விசாரணையில், இந்த நிகழ்ச்சியின் போது யார் நடனம் ஆடுவது என்பது குறித்து சண்டை எழுந்ததாகவும், அதுவே இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.
 
பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகளை காவல் துறை தேடி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil