Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு: மேலும் ஒரு மாநிலம் அறிவிப்பு!

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு: மேலும் ஒரு மாநிலம் அறிவிப்பு!
, திங்கள், 3 ஜனவரி 2022 (15:08 IST)
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே கேரளா கர்நாடகா மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மேலும் ஒரு மாநிலம் தெரிவித்துள்ளது. அந்த மாநிலம் கோவா என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் இந்த ஊர் அடங்கின்போது பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கோவா மாநில அரசு கேட்டுக்கொண்டது
 
கடந்த சில நாட்களாக கோவா மாநிலத்தில் கட்டுக்கடங்காமல் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டசபை கூடும் தேதி, இடம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!