Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த வங்கியாக இருந்தால் என்ன?? இனி தபால் நிலையத்திலும் பணம் எடுக்கலாம்: அமலுக்கு வந்தது புதிய சேவை

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (10:01 IST)
எந்த வங்கியாக இருந்தாலும், இனி தபால் நிலையங்களிலும் பணம் எடுக்கலாம் என ஒரு புதிய சேவை அமலுக்கு வந்துள்ளது.

கடந்த மாதம் வரை தபால் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே தபால் வங்கி சேவையை பயன்படுத்தமுடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது எந்த வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும் தபால் நிலைய வங்கிகளில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதாவது உங்கள் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே தபால் நிலையங்களில் பணம் எடுக்கமுடியும். கடந்த 1 ஆம் தேதி இந்த சேவை அமலுக்கு வந்தது. தற்போது இந்த சேவையை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் அறிவித்தார்.

மேலும் தபால் வங்கி சேவையை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு ரவிஷங்கர் பிரசாத் விருது வழங்கினார். தபால் ஊழியர்களின் சிறந்த செயல்பாட்டுக்கான கோன் பனேகா பாகுபலியின் முதல் இடத்திற்கான விருதை தமிழகம் பெற்றது. மேலும் டிஜிட்டல் கிராமம் திட்டத்தில் 3 ஆவது இடத்துக்கான விருதையும் தமிழகம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments