வாட்ஸப், ஜூம், ஸ்கைப் கால்களுக்கு புதிய கட்டுப்பாடு! – மத்திய அரசு அதிரடி!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (09:54 IST)
இணைய வழி கால்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது.

இந்தியா முழுவதும் இணைய சேவை வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் ஆடியோ, வீடியோ கால்களுக்கும் மக்கள் தற்போது இணையவழி சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இணையவழி ஆடியோ, வீடியோ கால் அழைப்புகளுக்கு வாட்ஸப், ஸ்கைப், ஜூம் உள்ளிட்ட செயலிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் புதிதாக தொலைத்தொடர்பு மசோதா 2022 – ஐ உருவாக்கி வருகிறது. இந்த புதிய மசோதாவில் ஓடிடி மற்றும் அனைத்து இணைய வழி சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி இணையவழி கால் வசதிகளை வழங்கும் செயலிகள் மத்திய அமைச்சகத்திடம் உரிமம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலிகள் சேவைகளுக்கான உரிமம் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் பதிவு கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments