Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

Senthil Velan
புதன், 26 ஜூன் 2024 (16:02 IST)
பல்வேறு குடும்பப் பெயர்களை கொண்டவர்களுக்கு ஒரே ஐடி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக எழுந்த புகார் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.
 
ஒருவரது ஐஆர்சிடிசி ஐடியில் இருந்து மற்றவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால், சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்லது ஒரு குடும்பப் பெயர்களை கொண்டவர்கள் ஒரே ஐஆர்சிடிசி ஐடி மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் உள்ளிட்ட விதிகளை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி உள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
 
இந்நிலையில், அந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானது மற்றும் தவறாக வழிநடத்தும் விதமாக வெளியிடப்பட்டு உள்ளதாகவும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐஆர்சிடிசி தனது எக்ஸ் பக்கத்தில், இ-டிக்கெட் புக்கிங் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என கூறப்பட்டுள்ளது.
 
பல்வேறு குடும்பப் பெயர்களை கொண்டவர்கள் ஒரே ஐஆர்சிடிசி ஐடியில் இ-டிக்கெட் புக்கிங் செய்ய முடியாது என வெளியான செய்தி போலியானது என்றும் ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற தவறான செய்திகளை பரப்புவதை சம்பந்தப்பட்டவர்கள் தடுக்க வேண்டும் என்றும், ரயில்வே வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப ஐஆர்சிடிசியில் ரயில் டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்படும் என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: மக்களின் குரலை வெளிப்படுத்த எதிர்க்கட்சிகளை பேச அனுமதியுங்கள்.! சபாநாயகருக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்..!!
 
யாரேனும் தங்களது ஐஆர்சிடிசி ஐடி மூலம் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் புக்கிங் செய்ய முடியும் என்றும் ஐஆர்சிடிசி ஐடியுடன் ஆதார் எண்ணை இணைக்காத பட்சத்தில் ஒருவர் மாதம் 12 டிக்கெட்டுகளும், ஆதார் இணைத்தால் 24 டிக்கெட்டுகள் வரையும் புக்கிங் செய்து கொள்ள முடியும் என்றும் ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments