Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூபாய் நோட்டுகள் குறித்த புதிய அறிவிப்பு!!

ரூபாய் நோட்டுகள் குறித்த புதிய அறிவிப்பு!!
, திங்கள், 14 நவம்பர் 2016 (12:10 IST)
ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் புதிய அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


 
 
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அதிரடியாக அறிவித்துள்ளது. 
 
அதன்படி, தனிநபருக்கு ரூ.4000 வரை வங்கிகளில் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். அதற்கு மேலான தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ள மட்டுமே முடியும். 
 
ஏடிஎம்-களில் ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும். வங்கி, ஏடிஎம் என அனைத்திலும் இருந்து நாளொன்றுக்கு ரூ.10,000 வரையிலும், வாரதிற்கு ரூ.20,000 வரை மட்டுமே பொதுமக்கள் எடுத்துக் கொள்ள முடியும்.
 
இந்நிலையில், பணம் மாற்றுவதற்கான, எடுப்பதற்கான உச்ச வரம்பை உயர்த்தி புதிய அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
 
அதன்படி, நாளொன்றுக்கு ரூ.4,500 வரை பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். வாரத்திற்கு பணம் எடுக்கும் வரம்பு 20,000-லிருந்து 24,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
ஏடிஎம்-களில் எடுக்கும் பணம் ரூ.2,000-லிருந்து ரூ.2,500- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய ரூபாய் நோட்டில் உள்ள கவர்னர் கையெழுத்தால் புதிய சர்ச்சை!