Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொற்கோவிலில் பாத்திரங்களை கழுவிய அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (02:51 IST)
சீக்கியர்களின் புனித நூலை ஆம் ஆத்மி கட்சியினர் அவமதித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, புதுடெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பொற்கோவிலில் பாத்திரங்களை கழுவினார்.
 

 
ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மாதம் சீக்கியர்களின் வழிபாட்டு தளமான பொற்கோவிலில் வழிபட்டு, ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
 
தேர்தல் அறிக்கையில் முதல் பக்கத்தில், பொற்கோவில் பக்கத்தில், கட்சி சின்னமான துடைப்பம் இருந்தது. இதனால் பலத்த சர்ச்சை எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கிய அமைப்புகள் போராட்டம் நடத்தின.
 
இந்நிலையில், திங்களன்று பொற்கோவிலுக்கு வந்த கெஜ்ரிவால், இளைஞரணி செயலாளர் ஆசிஷ்கேத்தன், பஞ்சாப் மாநில தலைவர் சஞ்சய் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பாத்திரங்களை கழுவினர். தொடர்ந்து பக்தர்களுக்கு உணவு பரிமாறினர். அதன்பின், அதிகாலை வழிபாட்டிலும் பங்கேற்றனர். இதன் பின்னர் கிளம்பி சென்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments