Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருநாய்களால் கடித்து குதறப்பட்ட பச்சிளம் குழந்தை: ஹைதராபாத்தில் கொடுமை

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (17:53 IST)
ஹைதராபாத் அருகே உள்ள விகரபாத் ஆர்டிசி பேருந்து நிலையத்தில் 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அப்பகுதியில் இருந்த தெருநாய்கள் கடித்துக் குதறி கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 
 
கடந்த சனிக்கிழமை இரவு பேருந்து நிலையத்தில் தங்கிய இரண்டு பெண்கள் குழந்தையை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர். பாதுகாப்பின்றி தனியாக கிடந்த குழந்தையை அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாய்கள் கூட்டமாக சூழ்ந்து கடித்துக் குதறியுள்ளது.
 
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த மக்கள் ஓடி வந்து நாய்களை விரட்டியடித்தனர். எனினும், குழந்தையை நாய்கள் கடித்து, பாதி உடலை தின்றுவிட்டதால் குழந்தை உயிரிழந்தது.
 
இது தொடர்பாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments