Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ரூபாய் நோட்டில் நேதாஜி படம்… மத்திய அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை!

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (08:47 IST)
மறைந்த சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தை ரூபாய் நோட்டில் இடம்பெற செய்யவேண்டும் என்றும் மதுரை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்து துல்லியமான தகவல்கள் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் வரும் ஜனவரி 23 ஆம் தேதி அவரின் 125 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் மத்திய அரசு அவரைக் கௌரவிக்கும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 23 ஆம் தேதியை பராக்கிரம நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரின் பெருமைகளை தற்கால இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற வகையில் ரூபாய் நோட்டுகளில் அவரின் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வழக்கு ஒன்று மதுரை நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘பிரதமர் அலுவலக முதன்மைச் செயலர், உள்துறை செயலர், நிதித்துறை செயலர், மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ எனக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments