Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெஸ் வாடியா என் முகத்தில் எரியும் சிகரெட்டை வீசினார் - பிரீத்தி ஜிந்தா

நெஸ் வாடியா என் முகத்தில் எரியும் சிகரெட்டை வீசினார் -  பிரீத்தி ஜிந்தா
, புதன், 23 ஜூலை 2014 (13:03 IST)
பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா தன் முகத்தில் எரியும் சிகரெட்டை வீசியதாகவும், தன்னை அறையில் பூட்டியதாகவும் காவல் துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது பாலியல் புகார் அளித்துள்ளார். மே 30 ஆம் தேதி  ஐபிஎல் போட்டிகளின்போது வாடியா தன்னிடம் வாங்கடே மைதானத்தின் மூன்று இடங்களில் தகாத முறையில் நடந்ததாக தெரிவித்துள்ள அவர் காவல் துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், 
 
'நெஸ் வாடியா என்னிடம் பழகும்விதம் கடந்த சில நாட்களாக மாறியுள்ளது. எனது முகத்தில் எரியும் சிகரெட்டைப் போடுவது, என்னை அறையில் பூட்டிவைப்பது என அவர் வன்முறை மிகுந்த செயல்களை செய்துள்ளார்.
 
அவர் (வாடியா) என்னிடம் இருந்து விலகி இருக்க வேண்டுமென நான் புகார் கொடுத்தேன். அப்போதுதான் என்னால் நிம்மதியாக இருக்கமுடியும். இல்லையென்றால் ஒருநாள் அவருக்கு கோபம் அதிகமாகி என்னை கொலை செய்துவிடுவார், இது எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது' எனக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil