Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணிப்பெண்கள் பாலியல் பலாத்காரம் : விசாரணைக்கு சவுதி ஒத்துழைக்க வேண்டும்

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (08:46 IST)
பணிப்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு சவுதி அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது. 
 
இந்தியாவுக்கான சவுதி அரேபிய தூதரக செயல்பட்டு வருபவர் சவுது முகமது. இவரது வீட்டில் பணிபுரிந்த இரண்டு நேபாள பெண்களை தூதரும், அவரது வீட்டிற்கு வந்த விருந்தினர்களும் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
 
சவுதி தூதர் தங்களை கடுமையாக தாக்கியதாகவும், வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த இரண்டு நேபாள பெண்களும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
இதனைத் தொடர்ந்து  நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அந்த இரண்டு பெண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என்பது தெரியவந்தது.
 
இக்குற்றச்சாட்டு குறித்து குர்கான் காவல் துறையினரிடம் விளக்கம் அளிக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், சவுதி தூதர் சவுது முகமதுவை வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து தனது நீண்ட விளக்கத்தை சவுது முகமது குர்கான் காவல்துறையினரிடம் அளித்தார். 
 
இந்நிலையில் தங்களது தூதர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது என்றும், தூதரக அதிகாரி மீது விசாரணை நடத்தக்கூடாது என்றும் சவுதி அரேபிய அரசு தெரிவித்து வருகிறது. 


 
 
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கும் வகையில் சவுதி அரேபிய தூதர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேபாள அரசும் இந்தியாவை தொடர்ந்து வலியுறுத்தி  வருகிறது.
 
இதனிடையே பணிப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இந்திய சவுதி அரசை வலியுறுத்தி உள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!