Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாதம் ஒரு சிலிண்டர் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியது

மாதம் ஒரு சிலிண்டர் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியது
, வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (15:44 IST)
மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரை மாதத்திற்கு ஒன்று மட்டுமே பெற முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு விலக்கிக்கொண்டுள்ளது.
 
புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
மக்களின் தேவைகளை அவர்கள் விரும்பும்போது பூர்த்தி செய்ய, இந்த மாற்றம் பயன்படும் என்று அவர் கூறினார்.
 
ஒரே மாதத்தில் ஒன்றுக்கும் கூடுதலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள், இப்போது பெற முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil