Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டம்: அதிமுகவுக்கு அமைச்சர் பதவி உண்டா?

Webdunia
திங்கள், 20 மே 2019 (09:00 IST)
நேற்று வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் நாளை டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது.
 
இந்த கூட்டத்தில் புதிய அரசை யார் தலைமையில் அமைப்பது, எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த அமைச்சர் பதவிகள் கொடுப்பது உள்பட சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா, அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
 
இந்த தேர்தலில் அதிமுக  சுமார் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் அந்த கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதில் ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்றால் நிச்சயம் ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
 
அதேபோல் தமிழகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை ஆகிய நால்வர் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இந்த கூட்டம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments