Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரி வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்த திட்டமா?

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (21:38 IST)
தற்போது ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் வரி கட்டி வரும் நிலையில் வரும் பிப்ரவரியில் தாக்கல் செய்யவுள்ள இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதன்படி இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட தேவையில்லை என்ற நிலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மருத்துவ செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவினங்களுக்கான வரி விலக்கு மீண்டும் கொண்டுவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடுத்தர வர்க்கத்தினர்களின் வாக்குகளை கவர இந்த வருமான வரி வரம்பு உயர்த்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் நடுத்தர வர்க்கத்தினர்களை பாதிக்கும் ரயில் கட்டணம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments