Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் நெருக்கடியே ராஜினாமாவிற்கு காரணம் : கிரிக்கெட் வீரர் சித்து

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2016 (17:22 IST)
பாஜக தொடர்ந்து கொடுத்து வந்த நெருக்கடியின் காரணமாகவே நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக பிரபல கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.
 

 
பிரபல கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து ஜூலை 18ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆம் ஆத்மியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில் இது குறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சித்து, ”பஞ்சாப் எனக்கு தாய் வீடு. ஆனால் பாஜக மேலிடம் என்னை பஞ்சாப் மாநில அரசியலில் இருந்து விலகியிருக்குமாறு நான்கு முறை வலியுறுத்தியது.
 
என்னைப் பொருத்தவரை பஞ்சாப் நலனே முக்கியம். பஞ்சாபை விட எனக்கு எந்தக் கட்சியும் பெரியது அல்ல. பஞ்சாப் மக்களிடம் இருந்து என்னை விலகி இருக்கச் சொல்வது வேரை வெட்டுவதற்கு சமமானது.
 
பஞ்சாப் மக்களிடம் இருந்து விலகியிருக்கச் சொன்னதால் தான் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” என்றார். ஆம் ஆத்மி கட்சியில் சேரப் போகிறீர்களா? என்ற கேள்விக்கு சித்து பதிலளிக்கவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்.. உடனே என்ன செய்ய வேண்டும்?

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments