Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் நெருக்கடியே ராஜினாமாவிற்கு காரணம் : கிரிக்கெட் வீரர் சித்து

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2016 (17:22 IST)
பாஜக தொடர்ந்து கொடுத்து வந்த நெருக்கடியின் காரணமாகவே நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக பிரபல கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.
 

 
பிரபல கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து ஜூலை 18ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆம் ஆத்மியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில் இது குறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சித்து, ”பஞ்சாப் எனக்கு தாய் வீடு. ஆனால் பாஜக மேலிடம் என்னை பஞ்சாப் மாநில அரசியலில் இருந்து விலகியிருக்குமாறு நான்கு முறை வலியுறுத்தியது.
 
என்னைப் பொருத்தவரை பஞ்சாப் நலனே முக்கியம். பஞ்சாபை விட எனக்கு எந்தக் கட்சியும் பெரியது அல்ல. பஞ்சாப் மக்களிடம் இருந்து என்னை விலகி இருக்கச் சொல்வது வேரை வெட்டுவதற்கு சமமானது.
 
பஞ்சாப் மக்களிடம் இருந்து விலகியிருக்கச் சொன்னதால் தான் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” என்றார். ஆம் ஆத்மி கட்சியில் சேரப் போகிறீர்களா? என்ற கேள்விக்கு சித்து பதிலளிக்கவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்! - கன்னியாகுமரியில் ஜூன் 22-இல் நடைபெறுகிறது

2400 ரூபாய் கொடுத்தால் ரத்தம் கிடைக்கும்.. அரசு மருத்துவமனை முன் நடக்கும் வியாபாரம்.. அதிர்ச்சி தகவல்..!

KYC சரிபார்ப்பு என்ற பெயரில் இளம்பெண்ணிடம் ₹8.10 லட்சம் மோசடி: எஞ்சினியர் கைது..!

10 நிமிடம் சார்ஜ் செய்தால் 27 மணிநேரம் பயன்படுத்தலாம்! வந்துவிட்டது ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z3..!

அடுத்த கட்டுரையில்
Show comments