Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவின் தேசிய அவசர எண் 112: மத்திய அரசு முடிவு

இந்தியாவின் தேசிய அவசர எண் 112: மத்திய அரசு முடிவு
, செவ்வாய், 29 மார்ச் 2016 (15:03 IST)
இந்தியாவில் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் 112 என்ற எண்ணை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


 

 
தற்போது இந்தியாவில் பல்வேறு துறைகளுக்கும் வெவ்வேறு எண்கள் அவசர அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், நாட்டின் அனைத்து அவசர கால உதவி அழைப்புகளுக்கும் ஒரே எண்ணை அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய் தனது அறிக்கையில் பரிந்துரை செய்திருந்தது.
 
இந்நிலையில் தற்போது 112 என்ற எண்ணை  இந்தியாவின் தேசிய அவசர எண்ணாக கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil