Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் வெளிநாடு பறக்கிறார் நரேந்திர மோடி

மீண்டும் வெளிநாடு பறக்கிறார் நரேந்திர மோடி
, வியாழன், 28 மே 2015 (04:10 IST)
அரசு முறை பயணமாக ஜூன் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசம் செல்கிறார்.

 
 
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு சுற்றுப்பயணமாக வங்கதேசம் செல்கிறார். இந்த பயணத்தில் இருநாட்டு உறவுகள் மேம்படுத்துவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே, பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் இருப்பதைவிட வெளிநாடுகளில்தான் அதிகம் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில், மோடியின் வங்கப்பயணம் மீண்டும் பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil