Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேபாள மக்களின் கண்ணீரைத் துடைப்போம்: நரேந்திர மோடி உறுதி

நேபாள மக்களின் கண்ணீரைத் துடைப்போம்: நரேந்திர மோடி உறுதி
, ஞாயிறு, 26 ஏப்ரல் 2015 (13:33 IST)
நேபாள மக்கள் அனைவரின் கண்ணீரையும் துடைக்க நாம் முயற்சி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் ஆறிய உரையில் கூறினார்.
 
டெல்லி ஆல் இந்தியா ரேடியோவில் "மான் கி பாத்" என்ற வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
 
அப்போது அவர் கூறுகையில். "நேபாளத்தின் வலி இந்தியாவின் வலி. 2001 ஆம் ஆண்டு குஜராத் நிலநடுக்கத்தின் போது "கட்ச்" பகுதியில் நான் இருந்திருக்கிறேன். நிலநடுக்கத்தின் கொடூரத்தை என்னால் இயல்பாகவே கற்பனை செய்து பார்க்க முடிகிறது.
 
தற்போது நேபாளத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியே முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும். அங்குள்ள அனைத்து மக்களின் கண்ணீரை துடைக்கவும் நாம் முயற்சி செய்ய வேண்டும்" என்று அப்போது மோடி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil