Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆகஸ்ட் 7: சென்னை வருகிறார் நரேந்திர மோடி

ஆகஸ்ட் 7: சென்னை வருகிறார் நரேந்திர மோடி
, புதன், 5 ஆகஸ்ட் 2015 (00:17 IST)
ஆகஸ்ட் 7ஆம் தேதி, சென்னையில், தேசிய கைத்தறி நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகைதர உள்ளார்.
 

 
தேசிய கைத்தறி விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் தென்மாநிலங்களைச் சேர்ந்த 3000 நெசவாளர்கள் பங்கு கொள்கிறார்கள். இதில் தமிழகதைச் சேர்ந்த 1000 நெசவாளர்களும் கலந்து கொள்கின்றனர். இதில் சிறந்த நெசவாளர்ளுக்கு விருதுகள் வழங்கப்படஉள்ளது.
 
இந்த விழாவில், பிரதமர் நேரந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். மேலும், சிறந்த நெசவாளர்ளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
 
பிரதமர் ஆன பின்பு, நரேந்திர மோடி முதன்முதலாகத் தமிழகம் வருகிறார் என்பதால், அவருக்கு மிகச் சிறப்பாக வரவேற்பு கொடுக்க வேண்டும் என பாஜக முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil