Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடி அவர்தான் பிரதமரென அவரே தீர்மானித்துக்கொண்டுள்ளார் - சோனியா காந்தி

மோடி அவர்தான் பிரதமரென அவரே தீர்மானித்துக்கொண்டுள்ளார் - சோனியா காந்தி
, வெள்ளி, 2 மே 2014 (12:39 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மோடி அவர் தான் பிரதமர் என அவரே தீர்மானித்துக்கொண்டு செயல்படுவதாக குற்றம் சாட்டினார். 
 
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பைஸாபாத் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், நரேந்திர மோடி ஏற்கனவே நாட்டின் பிரதமாகி விட்டது போல நடந்துக்கொள்கிறார். அவர் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது போலவும், பிரதமர் பதவியில் அவர் இருப்பது போலவும்  செயல்படுகிறார்.
 
அவர் அனைத்து செல்வங்களும் அவரது கைகளுக்கு வரவேண்டுமென நினைக்கிறார். தான் மிகுந்த சக்திவாய்ந்தவரென காண்பித்துக்கொள்கிறார்.  நாட்டின் விதியை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் என்பதை அவர் மறந்துவிட்டார் என பேசியுள்ளார். 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil