Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் தீ பிடித்து எரிந்த தேர்; விஷமிகளின் செயலா? – ஆந்திராவில் பதட்டம்!

Webdunia
ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (10:41 IST)
ஆந்திராவில் புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் தேர் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்க கோதாவரி மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில். இங்கு பல ஆண்டுகள் பழமையான தேர் ஒன்றும் உள்ளது. கொட்டகை அமைத்து பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்த தேர் திடீரென நேற்று நள்ளிரவில் தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கு உடனே கூடி தங்களால் இயன்றவரை தீயை அணைக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்த அவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். ஆனால் தேர் முழுவதும் எரிந்து சாம்பலானதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தேர் திடீரென தீப்பற்றியதற்கு விஷமிகள் யாராவது காரணமா என்ற ரீதியிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments